ஆப்நகரம்

நீட்டுக்கு எதிராக போராடிய திருநங்கைகளை நிர்வாணப்படுத்தியக் காவல்துறை

சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகளை நிர்வாணப்படுத்தி காவலர்கள் சோதனை செய்துள்ளனர்.

TNN 13 Sep 2017, 6:37 pm
சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகளை நிர்வாணப்படுத்தி காவலர்கள் சோதனை செய்துள்ளனர்.
Samayam Tamil the police officers naked the transgenders protesting in chennai
நீட்டுக்கு எதிராக போராடிய திருநங்கைகளை நிர்வாணப்படுத்தியக் காவல்துறை


அனிதாவின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ அமைப்புகளைத் தாண்டி சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கூட நீட் தேர்வு கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 7ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள அறிவுசார் சொத்துடைமை மைய அலுவலக வாயிலில் பூட்டு போடும் போராட்டத்தில் 2 திருநங்கைகள் உள்பட 10 இளைஞர்கள் ஈடுபட்டனர்.

போரட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் தங்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக திருநங்கை கிரேஸ் பானு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
No matter how many times you strip me naked I will not fear you. I will continue to protest naked. Modi... https://t.co/xlPnHq4pHY — GRACE BANU (@thirunangai) September 13, 2017 அவர்கள் திருநங்கைதானா என்று சிறைதுறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக திருநங்கை கிரேஸ் பானு குற்றம் சாட்டியுள்ளார்.


The police officers naked the transgenders protesting in Chennai

அடுத்த செய்தி