ஆப்நகரம்

பிள்ளையார் பால் குடுச்ச மாதிரி இன்னொரு ஆச்சரிய சம்பவம்; பொதுமக்கள் பூஜை!

ராமநாதபுரம் அருகே வேப்ப மரத்தில் பால் வடிவதை ஆச்சரியத்துடன் கண்ட அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு பூஜை செய்து வணங்கி வருகின்றனர்

Samayam Tamil 14 Feb 2020, 8:34 pm
ராமநாதபுரம்: பிள்ளையார் பால் குடித்த மாதிரி மற்றொரு ஆச்சரிய சம்பவ ராமநதபுரம் அருகே நடந்துள்ளது.
Samayam Tamil வேப்ப மரத்தில் பால்
வேப்ப மரத்தில் பால்


மாசி மாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள், குலதெய்வ வழிபாடு என களைகட்டும். ஒவ்வொரு நபரும் குல தெய்வத்தை வணங்கக் கூடிய சிவராத்திரி இந்த மாதத்தில் தான் வருகிறது. இந்த நிலையில், மாசி மூன்றாம் நாளான இன்று, ராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி என்ற கிராமத்தில் உள்ள வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்துள்ளது.

ஷூ போடாமல் பேண்டேஜை ஷூவாக மாற்றி ஓடிய சிறுமி...! எத்தனை தங்கம் பெற்றார் தெரியுமா?

இதனை ஆச்சரியத்துடன் கண்ட அப்பகுதி மக்கள் வேப்பமரத்திற்கு பூஜை செய்து வணங்கி வருகின்றனர். பெண்கள் கூட்டமாக குலவையிட்டு வேப்ப மரத்திற்கு குங்குமம் சந்தனம் இட்டு பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.


வேப்பமரத்தில் பால் வடிவது குறித்து அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், ஆண்டாண்டு காலமாக இத்தகைய நிகழ்வை தெய்வ காரியம் என்றே நினைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி