ஆப்நகரம்

கொரோனா வைரஸ்: தேர்வு எழுத முடியாத பிளஸ்2 மாணவர்களுக்கு குட் நியூஸ்

தமிழகத்தில் மூடப்பட்ட எல்லைகள், குறைவான போக்குவரத்து, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் ஏராளமான மாணவர்கள் பிளஸ் 2 இறுதி பொதுத்தோ்வை எழுதவில்லை

Samayam Tamil 25 Mar 2020, 3:14 pm
சென்னை: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் கடந்த 2ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. இதனிடயே, கொரோனா பாதிப்பு தமிழகம் உள்பட நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், பிளஸ்2 பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், பிளஸ்1 பொதுத்தேர்வை மட்டும் ஒத்தி வைத்த தமிழக அரசு பிளஸ்2 தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து, பிளஸ் 2 இறுதி பொதுத்தோ்வு நேற்று நடைபெற்றது. வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கான தோ்வு நடந்தது. உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில் காலை 10.30 மணிக்குத் தோ்வு துவங்கி 1.45 மணிக்கு தோ்வு முடிந்தது. தேர்வெழுத வந்த மாணவர்கள் முகக்கவசத்துடன் வந்து எழுதினர். தோ்வறைக்குள் செல்வதற்கு முன்பு மாணவா்கள் தங்களது கைகளை சுத்தம் செய்த பிறகே தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.

கொரோனா: சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரிக்கு தடை..!

எனினும், தமிழகத்தில் மூடப்பட்ட எல்லைகள், குறைவான போக்குவரத்து, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் ஏராளமான மாணவர்கள் பிளஸ் 2 இறுதி பொதுத்தோ்வை எழுதவில்லை. சுமார் 14,000 மாணவர்கள் தேர்வெழுதவில்லை எனவும், அதுதவிர தனித்தேர்வர்கள் 20,000 பேர் தேர்வெழுதவில்லை எனவும் தெரிகிறது. எனவே, இந்த மாணவர்களை வேறு ஒரு தேதியில் தேர்வெழுத அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24ஆம் தேதி தேர்வு எழுத முடியாத 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் மறு தேர்வு அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி