ஆப்நகரம்

உரிமைக்குழு நோட்டீஸ்சுக்கு ஸ்டாலின் பதிலடி

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நிலைக்க செய்வதற்காகவே திமுக எம்.எல்.ஏக்கள் மீது குட்கா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TNN 28 Aug 2017, 9:34 pm
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நிலைக்க செய்வதற்காகவே திமுக எம்.எல்.ஏக்கள் மீது குட்கா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil the reply of m k stalin for the kutka drug
உரிமைக்குழு நோட்டீஸ்சுக்கு ஸ்டாலின் பதிலடி


சட்டமன்றத்தில் குட்கா வை கொண்டுவந்ததற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் 21 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை நிலைக்க செய்வதற்காகவே திமுக எம்.எல்.ஏ.,க்கள் மீது குட்கா நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தைரியமிருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கட்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், குட்கா விவகாரம் குறித்த உரிமைக்குழு நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.

the reply of m.k stalin for the kutka drug

அடுத்த செய்தி