ஆப்நகரம்

மாதம் தோறும் 5000 ரூ: முதல்வரின் அதிரடித் திட்டம் நாளை முதல் அமல்!

தமிழ்நாட்டில் கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்கும் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Oct 2021, 12:11 pm
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்வடிவம் பெறுகின்றன. அவற்றில் மற்ற துறைகளை பின்னுக்குத் தள்ளி அறநிலையத் துறை பல திட்டங்களை செயல்படுத்தி முன்னிலை வகிக்கிறது.
Samayam Tamil mk stalin


சட்டப்பேரவையில் செப்டம்பர் 4ஆம் தேதி நடந்த இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு மொட்டை போடுவதற்கு இனி கட்டணம் இல்லை; அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்ற அறிவித்தார்.
திமுகவின் ஸ்லீப்பர் செல்லா இந்த மாஜி அமைச்சர்? எடப்பாடி தரப்பு பீதி!இந்நிலையில், கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (அக்டோபர் 5) தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்ட விழாவில் கலந்து கொள்ள 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்க வேண்டும்.
திருமாவிடம் ஸ்டாலின் காட்டிய உளவுத் துறை ரிப்போர்ட்?
பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். இதற்காக பொறுப்பு அலுவலர் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர்கள் சீதாராமன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி