ஆப்நகரம்

வேப்பனப்பள்ளியில் குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றியம் முற்றுகை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Mar 2019, 7:37 am
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil water


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்துர் கிராமத்தில் 150 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ஊராட்சி செயலாளர் தேவராஜ் என்வரிடம் பல முறை இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் பொதுமக்களின் கோரிக்கையை பொருட்படுத்தமால் அலட்சியமாக இருந்து வந்துள்ளார். இதனால் இக்கிராமத்தில் நாளுக்கு நாள் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

கிராம மக்களின் தேவைக்கு ஒருபோதும் உதவது இல்லை. தேவைகளை செய்து தருவதில்லை என்றும் அலுவலகத்தில் ஒருபோதும் இருப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோபடைந்த கிராம மக்கள் நேற்று வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குள் புகுந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களது குறைகள் குறைத்தும் ஊராட்சி செயலாளர் மீது சரமாரியாக புகார் கூறினார்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்து குடிநீர் பிரச்சினையை, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த்தை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சற்றுநேரம் இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அடுத்த செய்தி