ஆப்நகரம்

அண்ணன் இறந்ததால் கதறி அழுது உயிரை விட்ட தங்கை..! ராமேஸ்வரத்தில் சோகம்...

அண்ணனுடைய இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கையும் உயிரை விட்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Oct 2019, 5:52 pm
அண்ணன், தங்கை உறவின் புனிதத்தை பற்றி கூறி கொண்டே போகலாம். தாய், தந்தையிடம் சொல்ல முடியாத விஷயங்களை கூட ஒரு பெண் தனது அண்ணனிடம் எளிமையாக கூறி விடுவாள். இந்நிலையில் வாழ்கையில் மட்டுமல்ல மரணத்திலும் அண்ணனை விட்டுக்கொடுக்காமல் தன்னுயிரை விட்ட பெண்ணின் இறப்பு கேட்போரை கண் கலங்க வைத்துள்ளது.
Samayam Tamil 5


நாங்குநேரியில் எம்.பி. வசந்தகுமார் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பணை அடுத்த அக்காள்மடத்தை சேர்ந்தவர் இளமாறன் (52) . இவர் மீனவத் தொழில் செய்து வருகிறார். இவருடன் பிறந்த சகோதரிகள் மொத்தம் நான்கு பேர். இதில் மூன்றாவது சகோதரி பெயர் சாந்தி (38). அண்ணன், தங்கை இருவருக்கும் திருமணம் ஆகி ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!!

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல இளமாறன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து சாலையில் நடந்து சென்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கமபக்கத்தினர் அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளமாறன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த இறப்பு செய்தியை கேட்ட இளமாரனின் சகோதரி சாந்தி, கதறி அழுத்த சம்பவம் ஊர் மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.

சசிகலா விடுதலையில் சிக்கல்: கைவிரித்த சிறைத்துறை இயக்குநர்

இந்நிலையில் இளமாரனின் பூத உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அண்ணனின் இறப்பை குறித்து தொடர்ந்து அழுது கொண்டிருந்த சாந்தி, திடீரென மயங்கியிருக்கிறார். இதனால் உறவினர்கள் அவரை ஆசுவாசப்படுத்த முயற்சித்துள்ளனர். பேச்சு மூச்சின்றி இருந்த சாந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அதிக ரத்தம் அழுத்தம் காரணமாக அவர் மயங்கி இறந்துவிட்டதாக தெரியவந்தது.

இளமாரனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்த குடும்பத்தினருக்கு சாந்தியின் மரண செய்தி பேரிடியாகவே இருந்தது. ஒரே நாளில் அண்ணன், தங்கை இறந்த சம்பவம் அக்காள்மடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி