ஆப்நகரம்

பனி மூட்டத்தை வேடிக்கையாக நின்று பார்த்து செல்ஃபி எடுத்த குமரி மக்கள்!

குமரி மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட பனி மூட்டத்தை அதிசமாயமாக பார்த்து செல்ஃபி எடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 11 Feb 2019, 7:21 pm
குமரி மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட பனி மூட்டத்தை அதிசமாயமாக பார்த்து செல்ஃபி எடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil Fog


குமரி மாவட்டத்தில் சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப் பட்டுவந்த நிலையில் இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக சில பகுதிகளில் கன மழையும் சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது.

இதனால் சாலைகளில் வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்களை காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதுபோல் இருசக்கர வாகனங்களில் சென்ற நபர்களும் கால்நடையாக சென்ற நபர்களும் பல்வேறு பகுதிகளில் நின்று பனிமூட்டத்தை செல்ஃபி எடுத்தனர். இந்த பனிமூட்டம் ஆனது சூரியன் உதித்த பிறகும் பல மணிநேரம் காணப்பட்டது.

அடுத்த செய்தி