ஆப்நகரம்

தமிழகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 28 Apr 2017, 10:37 pm
சென்னை : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil the storming possibility in tamil nadu
தமிழகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்



இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே மிக அதிக அளவிலான வெப்பம் நிலவுகிறது. இந்த அதிக வெப்பத்தின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது

இதனால் வேறு பகுதியில் இருந்து வீசும் காற்றின் காரணமாக சூறைக்காற்று வீசக்கூடும் . சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் " என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

the storming possibility in tamil nadu

அடுத்த செய்தி