ஆப்நகரம்

கனமழை எதிரொலி: நொய்யல் ஆற்றில் வெள்ளம்

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Jun 2018, 5:16 pm
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil noyyal river flood


கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் இடைவிடாது தொடர் கனமழை பெய்து வருவதால், சிறுவாணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிலிருந்து உருவாகும் நொய்யல் ஆற்றுப் பகுதியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் சிறுவாணி நொய்யல் ஆறு திருப்பூர் வழியாக வந்து கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் கலக்கிறது.

வழக்கமாக நொய்யல் ஆற்றில் சாக்கடை நீரும், சாயக்கழிவு நீரும் கலந்து ஒடும் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் பார்த்து பரவசமடைந்தனர். காரில் சென்றவர்கள் தங்களது காரை நிறுத்திவிட்டு வெள்ளம் பாய்ந்தோடுவதை கண்டு ரசித்தனர். இதனிடையே வெள்ளத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி அபாயக் குரல் எழுப்பினார். பின்னர், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர்.

அடுத்த செய்தி