ஆப்நகரம்

சேலம் எட்டு வழிச்சாலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது.

Samayam Tamil 7 Dec 2020, 7:46 pm
சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தின் மூலம் பல்லாயிர கணக்கான விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கும், ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Samayam Tamil delhi supreme court


அதன் பேரில், சேலம் எட்டுவழிசாலைக்கு இடைக்கால தடைவிதித்த உயர் நீதிமன்றம், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்தியது தவறு என்றும் அது செல்லாது என்றும், அந்த திட்டத்திற்காக வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்வதாகவும் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரியவர்களிடம் உடனே ஒப்படைத்து அதற்காக ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை வருவாய் துறையின் மூலம் எட்டு வாரங்களில் மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டம்..! இன்று ஒருவருக்குக்கூட பாதிப்பே இல்லை

அந்த தீர்ப்பை எதிர்த்து எட்டு வழிச்சாலை திட்ட மேலாளர் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த நிலையில் இறுதி தீர்ப்பானது நாளை வெளியாகும் என டெல்லி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி