ஆப்நகரம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..! அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 24 Oct 2020, 9:28 pm
Samayam Tamil tn govt
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் விவரத்தை பாப்போம்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல, நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை இயக்குநர் வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி