ஆப்நகரம்

தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 40 நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் 2 பெண்கள் ஏறு பூட்டி உழுவது போல இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNN 25 Aug 2017, 1:36 pm
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 40 நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் 2 பெண்கள் ஏறு பூட்டி உழுவது போல இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil the tn farmers protest continues for 40 days
தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் 40 நாளாக தொடர்ந்துவருகிறது.

இதையொட்டி போராட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள், மாடுகளைப் போல ஏரில் பூட்டப்பட்டனர். பூட்டப்பட்ட ஏறில் கலப்பையும் இணைக்கப்பட்டு இருந்தது. ஏறில் பூட்டிய பெண்களை , பிரதமர் மோடி போல வேஷம்போட்ட ஒருவர் சாட்டையால் அடித்துச் செல்வது போல ஊர்வலம் நடந்தது.

இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு மாநில விவசாய சங்க பிரதிநிதிகளும், உச்சநீதிமன்றத்தின் வக்கீல்களும் கலந்து கொண்டனர். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு இந்த ஊர்வலத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் வறட்சியால் கருகிய பயிர்களுக்கு தர வேண்டிய நஷ்டஈடு இன்றுவரை கிடைக்கவில்லை. தற்கொலை செய்துகொண்ட 400 விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கிறார்கள்.
அவர்கள் மாடுகளைப் போல உழைக்க வேண்டியுள்ளது. மத்திய அரசும் அவர்களை மாடுகளாகவே பார்க்கிறது. எனவே அதை உணர்த்தி இந்த போராட்டத்தை நாங்கள் நடத்தினோம்’ என்று கூறினர்.

The tn farmers protest continues for 40 days .

அடுத்த செய்தி