ஆப்நகரம்

ரேஷன் அட்டைக்கு 2000 ரூ: டோக்கன் விநியோகம் தொடக்கம்!

கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

Samayam Tamil 11 Jun 2021, 8:17 am
கொரோனா நிவாரண நிதியாக ஜூன் மாதத்துக்கான 2000 ரூ, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கின.
Samayam Tamil TN RATION CARD


கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இது ஒரு புறமிருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இருப்பினும் இந்த கசப்பு மருந்தை மக்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஓரங்கட்டப்பட்ட ஸ்டாலினின் வலது கரம்: ஆமா அவரு எங்கே?
ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக மே மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

இரண்டாவது தவணையாக ஜூன் மாதத்துக்கும் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று தொடங்கிவைத்தார். அத்துடன் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.
ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு? முதல்வர் சொல்லும் ஷாக், அப்புறம் சில சர்ப்ரைஸ்!
இந்தத் திட்டம் ஜூன் 3ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டாலும் மக்களுக்கு இன்று முதல் வீடுவீடாக டோக்கன் வழங்கப்படுகிறது. தினசரி 200 கார்டுகளுக்கு என ஒவ்வொரு கடையிலும் நிவாரணத் தொகை விநியோகம் செய்யப்பட உள்ளது.

அடுத்த செய்தி