ஆப்நகரம்

இளையராஜாவுக்கும் ஜெயலலிதா இரங்கல் பாட்டுக்கும் தொடர்பில்லை!

சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் ஜெயலலிதா இரங்கல் பாடலை, இளையராஜா பாடவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது.

TNN 8 Dec 2016, 8:38 pm
சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் ஜெயலலிதா இரங்கல் பாடலை, இளையராஜா பாடவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil the tribute song for jayalalithaa wasnt composed by ilayaraja
இளையராஜாவுக்கும் ஜெயலலிதா இரங்கல் பாட்டுக்கும் தொடர்பில்லை!


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்காக இசைஞானி இளையராஜா எழுதி, பாடிய பாடல் என்று சமூக வலைதளங்களில் ஒரு பாடல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில், அப்படி ஒரு பாடலை இளையராஜா பாடவே இல்லை.

விஜய் சேதுபதி, ஷாம், ஆர்யா இணைந்து நடித்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சதீஸ் வர்சன் என்பவர் இசையமைத்து பாடிய பாடல்தான் அது. அந்த பாடல் வரிகளை எழுதியவர், கவிஞர் அஸ்மின். இவர் ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

ஜெயலலிதா இறந்த பிறகு அஸ்மினும் வர்ஷனும் இந்த பாடலை உருவாக்கியுள்ளனர். அதை இருவரும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். சதீஸ் வர்சனின் குரல் கேட்பதற்கு இளையராஜாவின் குரலைப் போல் இருப்பதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The tribute song for Jayalalithaa, which is trending in social media wasn’t composed by Ilayaraja.

அடுத்த செய்தி