ஆப்நகரம்

லஞ்சம் வாங்கிய புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது

லஞ்சம் வாங்கிய புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 9 Aug 2017, 1:57 pm
லஞ்சம் வாங்கிய புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil the vellore corporation commissioner kumar arrested for corruption complaint
லஞ்சம் வாங்கிய புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கைது


வேலூர் மாநகராட்சி ஆணையராக இருப்பவர் குமார். வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (30). கான்டிராக்டர். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பினார் இதற்காக ரூ.10.23 லட்சம் வழங்க வேண்டும். 2 சதவீத கமிஷன் அடிப்படையில் ரூ.22 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று ஆணையாளர் குமார் கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இன்று 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது குமாரை வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


The Vellore corporation commissioner Kumar arrested for corruption complaint

அடுத்த செய்தி