ஆப்நகரம்

நீதிக்கு வந்த சோதனை ? நீதிமன்ற வளாகத்தில் திருடப்பட்ட விநாயாகர் சிலை

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Aug 2017, 5:46 pm
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the vinayagar statue in dindukal court was theft
நீதிக்கு வந்த சோதனை ? நீதிமன்ற வளாகத்தில் திருடப்பட்ட விநாயாகர் சிலை


திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயர விநாயகர் சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. எங்கே திருட்டு நடந்தாலும் அந்த தண்டணையை நீதி மன்றங்கள்தான் முடிவு செய்யும். ஆனால் நீதிமன்ற வளாகத்திலே தனது கைவரிசையை திருடர்கள் காட்டியுள்ளனர். பிள்ளையார் சிலையையே திருடி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகே செயல்பட்டு வந்த மாவட்ட நீதிமன்றத்தை , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள புதிய கட்டடத்திற்கு சமீபத்தில் மாற்றியுள்ளனர். இதனால் பழைய நீதிமன்றத்தில் உள்ள பிள்ளையாரை புதிய நீதிமன்ற வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழக்கறிஞர்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்த, ஒன்றரை அடி உயர விநாயகர் சிலையை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி