ஆப்நகரம்

நள்ளிரவில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி... எழும்பூரில் வியப்பு..!

ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த கர்ப்பிணி பெண் எவரின் உதவியும் இல்லாமல் தன் பிரசவத்தை தானே பார்த்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Dec 2019, 2:57 pm
காலில் முள் குத்தி விட்டாலே பிறரின் உதவி இல்லாமல் அந்த முள்ளை அவ்வளவு எளிதாக எடுத்த விட முடியாது. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியாத வலியாக கருதப்படும் பிரசவ வலியையையும் தாங்கிக்கொண்டு ஒருவரின் உதவியும் இன்றி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ரம்யா.
Samayam Tamil நள்ளிரவில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி... எழும்பூரில் வியப்பு...


ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவைச் சேர்ந்த தம்பதி வெங்கடேஷ் - ரம்யா (25). இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் மீண்டும் தங்களது ஊருக்கு செல்வதற்ககாக ரயில் டிக்கெட் எடுத்துவிட்டு எழும்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்தனர்.

ஆந்திராவுக்கு செல்லலும் ரயில் மறுநாள் காலையில் வருமென்பதால் இரவு முழுக்க ரயில் நிலையத்திலேயே தங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் வலியால் துடித்த அவருக்கு உதவி செய்யவும் அப்போது யாரும் இல்லை.

நீ காந்தியும் அல்ல, நான் புத்தனும் அல்ல: ஸ்டாலினை ஒருமையில் திட்டும் அமைச்சர்!

அதே வேளையில் பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த தனது கணவனையும் ரம்யா எழுப்பாமல் விட்டுள்ளார். இதையடுத்து தனது பிரசவத்தை தானே பார்த்துக்கொண்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தொப்புள்கொடியையும் அவரே அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

விடிந்த பின்னர் ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவலர் சம்பவத்தை அறிந்ததும் ரயில்வே சிகிச்சை மையத்துக்கு தகவல் அளித்தார். பின்னர் தானே பிரசவம் பார்த்துக்கொண்டு குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்ணை கண்டு மருத்துவ வட்டாரம் வியப்படைந்து அவரை பாராட்டியது. அதோடு தனக்கு பெண் குழந்தை பிறந்ததை பார்த்து மகிழ்ந்த வெங்கடேஷின் தருணம் நெகிழ்வை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி