ஆப்நகரம்

உயிர் வந்துருச்சி... சுமைதூக்கும் தொழிலாளியை காப்பாற்றிய பெண் காவலர்! சென்னையில் நெகிழ்ச்சி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வலிப்பு ஏற்பட்டு மயங்கிய தொழிலாளிக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Samayam Tamil 24 Oct 2020, 2:36 pm
சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த 21 ஆம் தேதி வழக்கம்போல செயல்பட்டு வந்தது. அப்போது மார்க்கெட்டின் 7 ஆவது கேட் அருகே வில்லிவாக்கம் காவல் நிலைய பெண் காவலர் முத்து கிருஷ்ணவேணி பாதுகாப்பு பணியில் இருந்தார். இந்த நிலையில், சுமை தூக்கிக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் தரையில் விழுந்து துடித்துக்கொண்டிருந்தார்.
Samayam Tamil koyambedu market


அதனை காவலர் கிருஷ்ணவேணி கண்டவுடன் உடனே சென்று அந்த வாலிபரை அசுவாசப்படுத்த முயன்றார். ஆனால் , அந்த வாலிபர் சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி மயங்கியுள்ளார். உடனே அவரது நெஞ்சுப்பகுதியில் சிபிஆர் முறைப்படி அழுத்தம் கொடுத்து மூச்சு பெற செய்தார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விசாரித்ததில் அந்த வாலிபர் திருச்சியை சேர்ந்த லட்சுமணன் (35) என்பது தெரிய வந்தது.

அங்கு அவருக்கு மேற்படி சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. காவலர் கிருஷ்ணவேணியின் இந்த மனிதநேய செயலும், முதலுதவியை விரைவாக கையாண்ட விதமும் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆற்றியது. சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்களும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

மூன்று நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இந்நிலையில், காவலர் கிருஷ்ணவேணி அளித்த முதலுதவி புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பெண் காவலருக்கு வெகுமதி அளித்து பாராட்டினார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் குற்ற சம்பவங்களை கண்காணிப்பது மட்டுமில்லாமல் அவசர காலங்களில் முதலுதவி செய்யக்கூடிய பயிற்சியையும் கற்றுக்கொண்டால், தாமதமாகும் மருத்துவ சிகிச்சையால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி