ஆப்நகரம்

மருத்துவமனையின் அலட்சியம்; குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆன ஆவலம்

கருவுற்ற பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால், மேல் சிகிச்சை அளிக்க இங்கு போதிய வசதிகள் இல்லை என கூறி மதுரைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் மத்தனமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது

Samayam Tamil 16 Oct 2019, 7:37 pm
ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ramanathapuram gh


ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரவணன்(32). இதே பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (29). கடந்த 2012ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி சரண்யா ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டுள்ளார்.

மகன்கள் கை விட்டதால் ஆற்றில் குதித்த தாய்..! கைகொடுத்த ஆகாயத்தாமரை..

இந்நிலையில், சரண்யாவுக்கு நேற்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சரண்யாவை சரவணன் அழைத்து வந்து ஸ்கேன் எடுத்து பார்த்த போது சரண்யா மீண்டும் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வயிற்றுவலி அதிகரிப்பை நிறுத்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சரண்யாவுக்கு ரத்தப்போக்கு அதிகரித்து காணப்பட்டதால் சரண்யாவின் உடல் நிலை குறித்து கவலையடைந்த சரவணன் உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். ஆனால், கருவுற்ற பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால், மேல் சிகிச்சை அளிக்க இங்கு போதிய வசதிகள் இல்லை என கூறி மதுரைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் மத்தனமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.

‘ஓட்டு மிஷின்ல, கள்ள ஓட்டுலாம் இல்லப்பா’: நாங்குநேரி இடைத்தேர்தல்!

இதுகுறித்து சரண்யாவின் கணவர் சரவணன் கூறுகையில், மூன்றாவது குழந்தை பிறந்தது பிறந்த மறு நாளே எனது மனைவிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. கருத்தடை செய்ய அனுமதி அளித்த பின்னரே மருத்துவர்கள் அதை செய்தனர். அதன் பிறகு இருவரும் வாழ்ந்து வந்தோம். தற்போது எனது மனைவி கர்ப்பமாக இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியத்தால் இவ்வாறாக நடந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்காக தான் இந்த அரசு மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு ஏழை எளியவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி