ஆப்நகரம்

மதுரை: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த பெண், 2 வாரம் கழித்து உயிரிழப்பு..!

உசிலம்பட்டி அருகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பெற்ற தீபா என்ற இளம்பெண் உடல்நலக்குறைவால் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Nov 2019, 4:56 pm
அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பெற்ற இளம்பெண் இரண்டு வாரங்கள் கழித்து திடீரென மயங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண்ணிற்கு அளிக்களிப்பட்ட சிகிச்சையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றசாட்டு எழுப்பியுள்ளனர்.
Samayam Tamil 5


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி தீபா. இந்நிலையில் தீபா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றார்.

அதன் பிறகு வீட்டில் மிகுந்த சோர்வுடன் இரண்டு வாரமாக ஒய்வு எடுத்து வந்துள்ளார். ஆபரேஷன் செய்யப்பட்ட தேகம் என்பதால் இதை பெண்ணின் கணவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாளை எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

இந்நிலையில் அறுவை சிகிச்சை காரணமாக போடப்பட்டிருந்த தையலை பிரிப்பதற்காக, தொட்டப்பநாயக்கனுர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு தீபா சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், திடீரென மயங்கி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஆரம்ப சுகாதார மயத்துக்கே அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட பின்பு , மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் தீபா பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை: நடுவானில் அதிர்ச்சி..! பெண் பயணி மாரடைப்பால் மரணம்..

ஆனால் பெண்ணின் மரணம் தொடர்பாக உறவினர்களுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார், தீபாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி