ஆப்நகரம்

மோடியின் அட்மின் கமல் கட்சியில் ஐக்கியம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

Samayam Tamil 4 Nov 2020, 6:27 am
மகளிர் தினத்தன்று மோடியின் டிவிட்டர் கணக்கை நிர்வகித்த தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.
Samayam Tamil kamal haasan


கடந்த மார்ச் மாதம் மகளிர் தினம் கொண்டாடப்பட்ட அன்று பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கை ஒருநாள் மட்டும் நிர்வகிக்க தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டார்.

இவர் சென்னையில் ‘ஃபுட் பேங்க் இந்தியா’என்ற அமைப்பை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் இப்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி? ஹின்ட் கொடுத்த கமல்ஹாசன்!

இவருக்கு கட்சியில் சென்னை மண்டல மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் நன்றி பதிவிட்டுள்ள சினேகா, “என்னை ஒரு நல்ல தலைவராக தேர்ந்தெடுத்து நம்புவதற்கும், மக்கள் நீதி மய்யத்தின் துணை மாநில செயலாளர் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி, சென்னை மண்டலத்திற்கு நியமித்த மரியாதைக்குரிய தலைவர் & நம்மவர் உயர்திரு டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

சசிகலா பயன்படுத்தப்போகும் பிரம்மாஸ்திரம்!

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது, “கூட்டணி என்பது என் வேலை. வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன் தான்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி