இதே ராஜாஜி அரங்கில் அன்று கீழே மிதித்து தள்ளப்பட்ட பெண்ணுக்கு இன்று தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தனது கண்ணீரால் அஞ்சலி செலுத்தி வருகிறது.
கடந்த 1987-ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், இதே டிசம்பர் மாதம் உயிரிழந்ததையடுத்து, இதே ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்க்கப்பட்டது.
அப்போது, எம்ஜிஆர்-ன் தலைமாட்டில் அழுதபடியே நின்றிருந்த ஜெயலலிதா, அவரது உடலை ஏற்றிச் சென்ற பீரேங்கி வாகனத்தில் ஏற முயன்றார். ஆனால், வாகனத்தின் மீதமர்ந்திருந்த கைகளும், கால்களும் ஜெயலலிதாவை எட்டி உதைத்து தள்ளி விட்டது.
கீழே விழுந்த, பிறப்பிலேயே போராட்ட குணம் மிக்க ஜெயலலிதா, தனது போராட்டத்தினாலும், விடா முயற்சியாலும், ஆணாதிக்கம் நிறைந்திருந்த அன்றைய அரசியலில் தனக்கேனே ஒரு இடத்தை தக்க வைத்தார். மக்கள் மனதெனும் அரியணையில் நீங்கா இடம் பிடித்தார். அன்று எட்டி உதைத்த கால்களும், தள்ளிவிட்ட கைகளும் இன்று இல்லை.
ஆனால், இன்று அதே ராஜாஜி அரங்கில், முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், தேசியக் கோடி போர்த்தப்பட்டு கம்பீரமாக படுத்துள்ளார். அவரை ஏற்றிச் செல்ல அதேபோன்றதொரு பீரேங்கி வாகனம் தயாராக உள்ளது. எம்ஜிஆர் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தின் அருகிலேயே இவருக்கென ஒரு இடம் தயாராகி வருகிறது. அதில் படுத்துறங்க, மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் நீந்திச் செல்ல தயாராகி வருகிறார் #RIPAmma "அம்மா ஜெயலலிதா"
The woman who raises from the Same Rajaji Hall where she lays today
கடந்த 1987-ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், இதே டிசம்பர் மாதம் உயிரிழந்ததையடுத்து, இதே ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்க்கப்பட்டது.
அப்போது, எம்ஜிஆர்-ன் தலைமாட்டில் அழுதபடியே நின்றிருந்த ஜெயலலிதா, அவரது உடலை ஏற்றிச் சென்ற பீரேங்கி வாகனத்தில் ஏற முயன்றார். ஆனால், வாகனத்தின் மீதமர்ந்திருந்த கைகளும், கால்களும் ஜெயலலிதாவை எட்டி உதைத்து தள்ளி விட்டது.
கீழே விழுந்த, பிறப்பிலேயே போராட்ட குணம் மிக்க ஜெயலலிதா, தனது போராட்டத்தினாலும், விடா முயற்சியாலும், ஆணாதிக்கம் நிறைந்திருந்த அன்றைய அரசியலில் தனக்கேனே ஒரு இடத்தை தக்க வைத்தார். மக்கள் மனதெனும் அரியணையில் நீங்கா இடம் பிடித்தார். அன்று எட்டி உதைத்த கால்களும், தள்ளிவிட்ட கைகளும் இன்று இல்லை.
ஆனால், இன்று அதே ராஜாஜி அரங்கில், முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், தேசியக் கோடி போர்த்தப்பட்டு கம்பீரமாக படுத்துள்ளார். அவரை ஏற்றிச் செல்ல அதேபோன்றதொரு பீரேங்கி வாகனம் தயாராக உள்ளது. எம்ஜிஆர் உறங்கிக் கொண்டிருக்கும் இடத்தின் அருகிலேயே இவருக்கென ஒரு இடம் தயாராகி வருகிறது. அதில் படுத்துறங்க, மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் நீந்திச் செல்ல தயாராகி வருகிறார் #RIPAmma "அம்மா ஜெயலலிதா"
The woman who raises from the Same Rajaji Hall where she lays today