தேனி மாவட்டத்தில் 45 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் நேற்று முதல் திறக்கப்பட்டன. மாவட்டத்தில் 97 கடைகள் உள்ள நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 66 மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால் மீதமுள்ள 31 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
இதனால் ஒவ்வொரு மதுக்கடைகளும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிமகன்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். பல்லவராயன்பட்டி மதுக்கடையில் நேற்று வரிசையில் காத்திருந்த குடிமகன்கள் மாலை 5 மணிக்கு மேல் மது கிடைக்காத விரக்தியில் ஆபாசமாக திட்டிக் கொண்டும், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசிக் கொண்டும் அப்பகுதியில் கடந்து சென்றுள்ளனர்.
மேலும் மதுக்கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லவராயன்பட்டி பகுதி சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் தங்களது அவசரத் தேவைக்குக் கூட அப்பகுதியை கடந்து வெளியில் செல்லமுடியாத சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.
நெய்வேலி தீ விபத்து: தமிழகத்தில் மின் தட்டுப்பாடா?
இந்த நிலையில் இன்றும் காலை 8 மணி முதலே 2 கிலோமீட்டர் நீளத்திற்கு குடிமகன்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதால் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 11.00 மணி வரை அங்கு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றதும் விற்பனை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஒவ்வொரு மதுக்கடைகளும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிமகன்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். பல்லவராயன்பட்டி மதுக்கடையில் நேற்று வரிசையில் காத்திருந்த குடிமகன்கள் மாலை 5 மணிக்கு மேல் மது கிடைக்காத விரக்தியில் ஆபாசமாக திட்டிக் கொண்டும், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசிக் கொண்டும் அப்பகுதியில் கடந்து சென்றுள்ளனர்.
மேலும் மதுக்கடையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்லவராயன்பட்டி பகுதி சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் தங்களது அவசரத் தேவைக்குக் கூட அப்பகுதியை கடந்து வெளியில் செல்லமுடியாத சூழலுக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.
நெய்வேலி தீ விபத்து: தமிழகத்தில் மின் தட்டுப்பாடா?
இந்த நிலையில் இன்றும் காலை 8 மணி முதலே 2 கிலோமீட்டர் நீளத்திற்கு குடிமகன்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதால் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் சுமார் 11.00 மணி வரை அங்கு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றதும் விற்பனை தொடங்கியது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.