ஆப்நகரம்

தியேட்டர்கள் திறப்பு: டிக்கெட் விலை உயருகிறதா? நாளை என்னென்ன படங்கள் வெளியீடு?

தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Aug 2021, 6:22 pm
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 200 நாட்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் ஆகஸ்ட் 23 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இதையொட்டி, தியேட்டர் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 1,100 திரையரங்குகள் உள்ளன. அரசின் உத்தரவின்படி உரிய வழிகாட்டுதலின்படி 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்படவுள்ளன.

திரையரங்கு பணியாளர்கள் உட்பட நாங்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம். தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும்நோக்கில் சட்டையில் பேட்ஜ் ஒன்று அணிந்துகொள்ளும் திட்டமும் உள்ளது. அதை பார்க்கும்போது மக்களுக்கு நம்பிக்கை வரும்.

இனி ரேஷன் கடையிலேயே எல்லாம், குடும்ப அட்டை தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

முதற்கட்டமாக அரண்மனை - 3, சிவக்குமார் சபதம், லாபம், பெல் பாட்டம், கான்ஜுரிங் - 3 ஆகிய திரைப்படங்கள் வெளியீடுக்கு தயாராக உள்ளன. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை '' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி