ஆப்நகரம்

தேனி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; மூவருக்கு தூக்கு தண்டனை!

தேனி: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Oct 2018, 2:36 pm
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 10 வயது சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவளை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், ஒன்றுக்கு மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
Samayam Tamil Child Rape


இதுதொடர்பாக வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய மூவரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த விசாரணையில் மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியின் தாயாருக்கு கருணைத் தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Theni Court orders death sentence to 3 persons in 10 year old rape case.

அடுத்த செய்தி