ஆப்நகரம்

தேனி மசாலா கம்பெனியில் பற்றி எரியும் தீ, வெளியான வீடியோ!

தேனி மாவட்டத்தில் தனியார் மசாலா நிறுவனத்துக்கு சொந்தமான சேமிப்பு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரத்துக்கும் மேலாகத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.

Samayam Tamil 14 Oct 2019, 12:13 pm
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில்பட்டியில் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனத்துக்குச் சொந்தமான சேமிப்பு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனிலிருந்து காலை திடீரென கரும்புகை வெளியே வந்தது. ஞாயிறு விடுமுறை என்பதாலும், இன்று காலை நேரம் என்பதாலும், அங்கே ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. கரும்புகை வருவதைப் பார்த்த குடோன் ஊழியர்கள் உடனடியாக தேனி மாவட்ட தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
Samayam Tamil Capture



இதைத்தொடர்ந்து சம்பவ இடத்து விரைந்த தீயை அணைக்க போராடினர். தீ குடோன் முழுவதும் மளமளவென பரவியதால், கூடுதலாக ஆண்டிபட்டி, போடி உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டது.


இப்போது மசாலா கம்பெனியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுக்குள் கொண்டு வர 5 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு காவல்துறையினரும் விரைந்துள்ளனர். சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையை நடத்தி வரும் காவல்துறையினர், தீயணைக்கப்பட்ட பிறகுதான் தீ விபத்து குறித்த விவரம் தெரியவரும் எனத் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி