ஆப்நகரம்

குரங்கணி காட்டுத்தீ; இரவில் மீட்பு பணி என்பது கடினம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இரவு நேரத்தில் மீட்பு பணிகள் கடினம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2018, 8:14 pm
தேனி: இரவு நேரத்தில் மீட்பு பணிகள் கடினம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil theni forest fire rescue operation is very difficult in night says minister nirmala sitharaman
குரங்கணி காட்டுத்தீ; இரவில் மீட்பு பணி என்பது கடினம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!


தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மலையேறும் பயிற்சிக்கு சென்றனர். இந்நிலையில் அங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் சிக்கிக் கொண்டனர்.

இவர்கள் கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மாணவிகளை மீட்க அருகிலுள்ள கிராம மக்களும், வனத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவல்துறை எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சூழலில் மீட்பு பணியில் ஈடுபட விமானப் படைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு பணிகள் தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரவில் மீட்பு பணி என்பது கடினம்; தீயை அணைக்கும் பணி ஹெலிகாப்டர்கள் மூலம் நடக்கும்.

காட்டுப்பகுதியில் தீப்பிடித்த இடங்களை ஆய்வு செய்தபின் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும். மருத்துவக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Theni Forest fire Rescue operation is very difficult in night says Minister Nirmala Sitharaman.

அடுத்த செய்தி