ஆப்நகரம்

Corona: பிரதமர் நேற்று சொன்னதை இன்று செய்து காட்டிய தேனி

35 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து, தேனி மாவட்டம் ஆரஞ்சு நிறப் பகுதியாக மாறவுள்ளது.

Samayam Tamil 28 Apr 2020, 12:45 pm
காணொலி வழியாக, மாநில முதல்வர்களுடன் நேற்று பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது, மாநில அரசுகளின் முயற்சிகள் அனைத்தும், பாதிப்புள்ள பகுதிகளை சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கும், ஆரஞ்சு நிறத்திலிருந்து பசுமை நிறத்திற்கும் மாற்றுவதை நோக்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Samayam Tamil teni


அதனை நிறைவேற்றும் வகையில், தேனி மாவட்டம் சிவப்பு மண்டலப் பகுதியிலிருந்து பசுமை மண்டலமாக மாறி வருகிறது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 35 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதனால் விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு தேனி மாவட்டம் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100% முடிவுக்கு வரும் தேதி? வெளியான ஆய்வு முடிவுகள்!

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “குணமடைந்து வீடு திரும்பிய அனைவரையும் வீடுகளில் தனிமையில் வைத்துக் கண்காணிக்கிறோம் அடுத்த 14 முதல் 16 நாட்களுக்குள் மீண்டும் தொற்று ஏற்படாவிட்டால் தேனி ஆரஞ்சுப் பகுதியாக அறிவிக்கப்படலாம்” என்று தெரிவித்தனர்.

இதேபோல கேரளாவில், புதிதாக ஒரு கொரோனாத் தொற்றும் உறுதி செய்யப்படாத நிலையில் திருவனந்தபுரம் பகுதி இன்று ஹாட்ஸ்பாட் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி