ஆப்நகரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 26 Aug 2018, 3:13 pm
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil pic (1)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு!


இதுதொடர்பாக இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: மேற்கு வங்காளம், வடக்கு ஒடிசா கடற்கரை மற்றும் அதையொட்டிள்ள வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மேலும் தெற்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும். மேலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். 29-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மழை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி