ஆப்நகரம்

டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

இலங்கை மற்றும் குமரிக்கடலுக்கும் தெற்கில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Dec 2018, 10:30 am
இலங்கை மற்றும் குமரிக்கடலுக்கும் தெற்கில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil india_rainn


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கும்தெற்கு, இலங்கைக்கு தென்மேற்கு பகுதியில் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் கொச்சி அருகே நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியும், குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியும் நேற்று ஒன்றாக இணைந்ததால் நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று 4ம் தேதி தாய்லாந்து பகுதியை கடந்து அந்தமான் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி வரும்பட்சத்தில் அந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து 7ம் தேதி அல்லது 8ம் தேதி தமிழக கடலோரப் பகுதிக்கு வரவும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி