ஆப்நகரம்

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Oct 2018, 1:02 pm
வளிமண்டலத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், இலங்கை முதல் கர்நாடகம் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக இன்று முதல் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யும்.

தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையும் பெய்யும். இந்த நிலை 4 நாட்கள் நீடிக்கும்.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி