ஆப்நகரம்

தமிழகத்தில் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்!

வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Sep 2018, 10:41 am
வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil pic (5)
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்!


இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: காற்று வீசும் திசையில் இருந்து ஏற்படக்கூடிய மாற்றம், வெப்பம் காரணமாக இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்தின் வட மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலும் இரவு மற்றும் பின்இரவு நேரங்களில் மழை தீவிரமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சென்னை வானிலை மைய ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி