ஆப்நகரம்

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஐந்து நாள்களுக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2022, 12:49 pm
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளது, அதற்கு அடுத்த மூன்று நாள்கள் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil tn weather


இன்று வெளியிட்ட அறிக்கையில், “மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 29.01.2022 தமிழக வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

30.01.2022:தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

பாஜக போடும் கேடிஆர் பிளான்: இதை மட்டும் கொடுத்துருங்க போதும்!

31.01.2022, 01.02.2022. 02.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மின் கட்டணத்தை கணக்கிட புதிய ஆப்: இனிமே இப்படி தான்!
ஏத்தாப்பூர் (சேலம்) வல்லம் (விழுப்புரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி