ஆப்நகரம்

வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும்: நீதிமன்றத்தில் ஒலித்த குரல்!

வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

Samayam Tamil 2 Dec 2020, 12:20 pm
சென்னையில் பாமகவினர் நடத்திய போராட்டத்தில் பொதுமக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil vanniyar sangam


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர்.

அப்போது பத்திரிக்கையாளர் வாராகி தரப்பில், சென்னையில் வன்னியர் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி சென்னையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர்1) போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமகவைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், திரும்பிச் செல்ல கூறினார்.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர். எனவே போராட்டத்தை நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

வன்முறையில் இறங்கிய பாமக: அதிமுக ரகசிய ஆதரவா? - பின்னணி இதுதான்!

மனுவாக தாக்கல் செய்தால் எந்த அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி