நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று இரவு உறைபனி காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறியதாவது:
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த பபுக்' புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அந்தமான் கடல்பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து, இந்த புயல் வலுவிழந்து, மியான்மர் கடற்கரையை 7-ஆம் தேதி வரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அதை யொட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இரவில் உறைபனி காணப்படும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த பபுக்' புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அந்தமான் கடல்பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து, இந்த புயல் வலுவிழந்து, மியான்மர் கடற்கரையை 7-ஆம் தேதி வரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அதை யொட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இரவில் உறைபனி காணப்படும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.