ஆப்நகரம்

இனி அரசு பேருந்துகளில் நாடக கலைஞர்களுக்கு லக்கேஜ் கட்டணம் இல்லை - தமிழக அரசு

நாடக கலைஞர்கள் தங்களது உடைமைகளை அரசு பேருந்துகளில் கட்டமில்லாமல் எடுத்து செல்ல அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 17 Nov 2020, 5:42 pm
தமிழகத்தில் உள்ள நாடக கலைஞர்கள் தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தி, நிகழ்ச்சிகளை நடத்திட பிற இடங்களுக்கு ரயில், அரசு பேருந்துகளில் கட்டண சலுகையுடன் பயணம் செய்ய தமிழக அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil தமிழ்நாடு அரசு பேருந்து


ஆனால், நிகழ்ச்சிகளுக்காக பிற இடங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் செல்லும்போது இசைக்கருவிகள், கலை பொருட்களை இலவசமாக பேருந்துகளில் கொண்டு செல்ல பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக நாடக கலைஞர்கள் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில், கடந்த போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின்போது, '' அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமிய கலைஞர்களுக்கு ஏற்கனவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் தங்கள் வாத்தியக்கருவிகளை அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, அந்த அறிவிப்பை ஆவன செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கீழ்கண்டவாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

ஆடை அணிகலங்கள், ஒப்பனை பொருட்கள், இசை வாத்தியக்கருவிகள், ஆர்மோனியம், தபேலா, டோலக், மிருதங்கம் மற்றும் இதர ஏதேனும் சிறிய அளவிலான இசைக்கருவிகளை இனி அரசு பேருந்துகளில் எடுத்து செல்லும்போது தனி கட்டணம் செலுத்த வேண்டாம்.

க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கு பேரிழப்பு - முதல்வர் வேதனை

கலை பண்பாட்டு துரையின் ஓர் அங்கமான இயல், இசை, நாடக மன்றத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை நாடக, கிராமிய கலைஞர்களுக்கு செய்து வரும் தமிழக அரசு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், எதிர்வரும் காலங்களில் பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி