ஆப்நகரம்

ஸ்டொ்லைட் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை – ஆலை நிா்வாகம்

ஸ்டொ்லைட் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்று வேதாந்தா குழும இயக்குநா் கிசோா் குமாா் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 30 Apr 2018, 12:13 pm
ஸ்டொ்லைட் ஆலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்று வேதாந்தா குழும இயக்குநா் கிசோா் குமாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Sterlite Factory


தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டொ்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்கும், ஆலையை தொடா்ந்து நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அம்மாவட்ட பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆலை செயல்படுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய சான்றிதழ் காலவதியான நிலையில், மீண்டும் சான்றிதழ் வழங்க மறுப்பு தொிவித்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாாியத்தின் சான்றிதழ் கிடைக்காததால், ஆலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வேதாந்தா குழுமத்தின் இயக்குநா் கிசோா் குமாாிடம் ஸ்டொ்லைட் ஆலை மூடப்படுமா என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த அவா், ஆலையை மூடும் பேச்சுக்கே இடம் இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாாியத்திடம் சான்றிதழ் பெறும் பணி சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி