ஆப்நகரம்

அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை: கமலுக்கு ஏன் இந்த கோபம்?

கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் செய்துள்ளதை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 12 Aug 2021, 6:30 pm
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தின நாட்களில் கிராம சபை கூட்டுவது வழக்கம். அப்போது அப்பகுதியில் உள்ளவர்கள் அங்குள்ள குறைகளை சபையில் கூறி கோரிக்கை வைப்பர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர நாளன்று கிராம சபைகளை கூட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், கொரோனா பரவல் காரணமாக வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபையை கூட வேண்டாம் என்றும் இதுகுறித்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும்''தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல் பதிவு:

கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆகஸ்ட் மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்..! - அவசர கோரிக்கை

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது'' என இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியிலும் கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அப்போது திமுக அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் கிராம சபை கூட்டங்களை கூட்ட ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி