ஆப்நகரம்

சென்னை மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது..!

சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த மருத்துவ மாணவி உடலின் பிரேத பரிசோதனை முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 1 May 2020, 5:55 pm
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறுதியாண்டு படித்து வந்த மாணவி, இன்று தனது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாணவியின் இறப்பு தற்கொலையா அல்லது உடல்நலக்கோளாறா என்ற குழப்பத்தின் நடுவே அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Samayam Tamil சென்னை மருத்துவ மாணவி


முன்னதாக மாணவி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரத்த மாதிரியை எடுத்துக்கொண்ட மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் மாணவிக்கு தொற்று இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஓகே... அது என்ன ஹெர்ட் இம்யூனிட்டி?

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டறிந்த அவரது உடலை பரிசோதனை செய்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. பிரேத பரிசோதனையின் முதற்கட்ட தகவலில், மாணவி விஷம் அருந்தியோ அல்லது வேறு விதமாக தற்கொலை செய்துகொண்டதற்கான எந்த தடயமும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் இறப்பு தொடர்பான முழு அறிக்கை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி