ஆப்நகரம்

ஸ்டேட் பேங்க் அதிகாரிகளுக்கு ஷாக்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் விடுப்பு பயணச் சலுகையை திரும்பப் பெற்றதில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 27 Jun 2022, 7:13 pm
பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுப்பு பயணச் சலுகையை திரும்பப்பெற்றதில் தவறில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்


பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் அதிகாரிகள் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் பயணம் மேற்கொள்ளும்பட்சத்தில் அவர்களுக்கு விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெளிநாட்டு பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்பப்பெற்று 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து அனைத்து இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தன.

மாணவிகளுக்கு ரூ.1000: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? யார் தகுதி பெற்றவர்கள்?
அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் வெளிநாட்டு பயண சலுகை திரும்பப்பெறப்பட்டு உள்ளதாகவும், மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால், பாரத ஸ்டேட் வங்கி முடிவில் தலையிட எந்த காரணமும் இல்லை என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி