ஆப்நகரம்

இனி தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது - அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தகவல் அளித்துள்ளார்.

TNN 4 Aug 2016, 4:26 pm
சென்னை: தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தகவல் அளித்துள்ளார்.
Samayam Tamil there will be no power cuts in the tamilnadu minister
இனி தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது - அமைச்சர்


சட்டசபையில் மின் மானிய கோரிக்கையில் பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கமணி : " அதிமுக ஆட்சியில் 8000 மெகாவாட் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலகளுக்கு 24மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

நாட்டில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் தமிழக 27சதவித பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரை 7016 மெகாவாட் மின்சார காற்றலை மூலமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தில் 4595 மெகாவாட் மின்சாரத்தை தமிழகம் பயன்படுத்தியுள்ளது.

வரும் 2021ம் ஆண்டுக்குள் இன்னும் பல மின்சார திட்டங்கள் தொடங்கப்பட இருக்கின்றனர். தமிழகத்தின் மின்சார தேவைக்கு போக வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளது. எனவே தமிழகத்தில் இனி எப்போதும் மின்வெட்டே இருக்காது" என அமைச்சர் கூறினார்.

அடுத்த செய்தி