ஆப்நகரம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: புயல் வராது!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 17 Oct 2017, 10:46 am
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil there will be rain in tamil nadu but no storm will come chennai
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: புயல் வராது!


இது தொடர்பாக அதன் இயக்குநர் எஸ்.பாலசந்திரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வட மேற்கு திசையில், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேசம் இடையே வரும் 19-ம் தேதி காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நேரடியாக மழை வாய்ப்பு இல்லாவிட்டாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் புயல் வர வாய்ப்பு இல்லை . அதற்கான அறுகுறியும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் அறிவித்துள்ளார்.

there will be rain in tamil nadu but no storm will come chennai

அடுத்த செய்தி