ஆப்நகரம்

'உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம்' மே தினத்தில் ரத்த தானம் செய்த பெண்கள்...

கோவையில் மாதர் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வந்து ரத்த தான முகாமில் ரத்தம் கொடுத்தனர்.

Samayam Tamil 1 May 2020, 8:20 pm
கோவை அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தவிர்க்கமுடியாத அறுவை சிகிச்சைகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர்கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம்


இதனையடுத்து அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் மே தின நாளில் உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் என்கிற முழக்கத்துடன் சிறப்பு இரத்த தான முகாமை இன்று நடத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையுடன் இனைந்து மாதர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் ஆவரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இம்முகாமில் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். முன்னதாக இம்முகாமில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கினைத்தினர்.

சென்னை மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்தது..!

இதேபோல காரமடை பகுதியில் மாதர் சங்கத்தினர் நடத்திய ரத்த தான முகமில் மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி மற்றும் மெகபுனிசா, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆவரம்பாளையத்தில் 60 யூனிட் ரத்தமும், காரமடையில் 40 யூனிட் ரத்தம் என 100 யூனிட் ரத்தம் இம்முகாம்களில் சேகரிக்கப்பட்டது.

அடுத்த செய்தி