ஆப்நகரம்

நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல : கிரண் பேடி ஆவேசம்

புதுச்சேரி அரசியல் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவது போல் நான் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க விருப்பம் இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

TNN 5 Apr 2017, 10:47 am
புதுச்சேரி : புதுச்சேரி அரசியல் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் விரும்புவது போல் நான் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க விருப்பம் இல்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil they are wishing for a rubber stamp kiran bedi
நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல : கிரண் பேடி ஆவேசம்


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ,அங்குள்ள அர்சியல் வாதிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நடைப்பெற்று வருகிறது. துணைநிலை ஆளுநர் தங்களது அதிகாரங்களை பறிக்க முயல்வதாக ஆளும் காங்கிரஸ் கட்சியின் உட்பட சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே கிரண்பேடியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக குடியரசு தலைவரிடம் முறையிடுவது குறித்து நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Wish these reps & OTHERS close ranks for a clean+corruption free Puducherry.. They are wishing for a rubber stamp.They told me to be 😷But ❌ pic.twitter.com/1hlzk3rpbk — Kiran Bedi (@thekiranbedi) April 5, 2017 இந்நிலையில், இது தொடர்பாக கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், புதுச்சேரி அரசியல் கட்சியகளும், மக்கள் பிரதிநிதிகளும் நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். வளர்ச்சியையும் மாற்றத்தையும் விரும்பாதவர்கள் மிரட்டுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
they are wishing for a rubber stamp: kiran bedi

அடுத்த செய்தி