திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே வீட்டுக்குள் திருட வந்தவரை அடித்துக் கொன்ற விவசாயி போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் ஒட்டன்சத்திரம் புறநகர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டி தனி வீடு கட்டி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் அந்தப் பகுதிக்குச் சென்ற மர்ம நபர், வீடு திறந்து கிடப்பது கண்டு சத்தியசீலன் வீட்டுக்குள் திருடும் நோக்கில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குள் மர்ம நபர் பதுங்கி பதுங்கி நுழைவது கண்டு சத்தியசீலன் மனைவி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த சத்தியசீலன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் அந்த மர்ம நபரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், பலியானவர் பெயர் மணிகண்டன் என்பதும், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பணிபுரிந்து வரும் அவரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சத்தியசீலன் மற்றும் அவரது உறவினரைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் ஒட்டன்சத்திரம் புறநகர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டி தனி வீடு கட்டி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் அந்தப் பகுதிக்குச் சென்ற மர்ம நபர், வீடு திறந்து கிடப்பது கண்டு சத்தியசீலன் வீட்டுக்குள் திருடும் நோக்கில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டுக்குள் மர்ம நபர் பதுங்கி பதுங்கி நுழைவது கண்டு சத்தியசீலன் மனைவி கூச்சலிட்டதாகத் தெரிகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த சத்தியசீலன் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் அந்த மர்ம நபரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த அந்த மர்ம நபர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பலியானதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீசார், இறந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், பலியானவர் பெயர் மணிகண்டன் என்பதும், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பணிபுரிந்து வரும் அவரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சத்தியசீலன் மற்றும் அவரது உறவினரைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.