ஆப்நகரம்

தமிழகத்தில் மூன்றாவது அணி மாற்று அணியாக இருந்ததில்லை: கருணாநிதி

தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி வெற்றி பெறும் மாற்று அணியாக இருக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்

TNN 30 Mar 2016, 9:49 am
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி வெற்றி பெறும் மாற்று அணியாக இருக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
Samayam Tamil third front cannot win in tamilnadu says karunanidhi
தமிழகத்தில் மூன்றாவது அணி மாற்று அணியாக இருந்ததில்லை: கருணாநிதி


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழகத்தில் மாற்று அரசியல், மூன்றாவது அணி, நான்காவது அணி, கூட்டணி ஆட்சி என்பவையெல்லாம், கற்பனையில் தோன்றிய மறுகணமே காலாவதியாகிவிட்டவை.

1989, 1996, 2006 தேர்தல்களில் கூட பலமுனைப் போட்டிகள் இருந்தும், திமுக அதிக இடங்களில், வெற்றி பெற்றிருப்பதை நினைவு கூற வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாகவே தமிழக அரசியல் களத்தில் மூன்றாவது அணி, வெற்றி பெறும் மாற்று அணியாக இருந்ததில்லை என சில நாளேடுகளில் கருத்துகள் வெளியாகி இருகிறது.

எனவே, 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது கல் மேல் எழுத்தைப் போன்று உறுதியானது என்பதை மனதில் கொண்டு களப்பணி ஆற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி