ஆப்நகரம்

வடசென்னையில் வருகிறது தமிழகத்தின் மூன்றாவது டைடல் பார்க்!!

வடசென்னை பகுதியில் அமையவுள்ள தமிழகத்தின் மூன்றாம் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு (டைடல் பார்க்) முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

Samayam Tamil 2 Jun 2020, 12:03 am
தமிழகத்தின் முதலாவது டைடல் பார்க், சென்னை தரமணியில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் 2010 ஆம் ஆண்டு டைடல் பார்க் தொடங்கப்பட்டது.
Samayam Tamil tidel park.


தற்போது மூன்றாவதாக, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் புதிதாக டைடல் பார்க் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 1) நடைபெற்றது.

காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பட்டாபிராமில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பெற்றோரே நீங்க சொல்லுங்க... பள்ளிகள எப்போது திறக்கலாம்? -தமிழக அரசு!

மொத்தம் 235 கோடி ரூபாய் மதிப்பில், 10 ஏக்கர் பரப்பளவில் 21 அடுக்குமாடிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்படவுள்ளது.

ஸ்டார்ட் அப் திட்டப் பணிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் வடசென்னை பகுதியில் டைடல் பார்க் அமைய உள்ளது. இதனை இரண்டாண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் நியமனம்!

புதிய டைடல் பார்க் செயல்பாட்டுக்கு வரும்போது 25 ஆயிரம் பேர் நேரடியாக வேலைவாய்ப்புகளை பெறுவர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் தென்சென்னை பகுதிகளிலேயே அமைக்கப்படுகின்றன என்ற விமர்சனம் உள்ளது. இந்த நிலையில் வடசென்னை பகுதியில் புதிதாக தகவல்தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி