ஆப்நகரம்

குடும்ப விழாக்களை தமிழில் நடத்தப் பயிற்சி; உடுமலையில் அசத்தல் முயற்சி!

உடுமலை: தமிழில் குடும்ப விழாக்களை நடத்த கரண ஆசான்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Samayam Tamil 21 Jan 2019, 12:20 am
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலக திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்திற்கு மாற்றாக குடும்ப விழாக்களை தமிழில் நடத்தும் கரண ஆசான்களுக்கு பயிற்சி கொடுக்கும் விழா நடைபெற்றது.

இதில் குடும்பப் பாங்கான திரைப்படங்களை எடுத்தவரும், திருக்குறள் கூட்டமைப்பின் தலைவருமான இயக்குநர் வெ.சேகர் பங்கேற்றார். இந்த விழா தளபதி பயிற்சி மன்றத்தில் நடந்தது.

புலவர் ஐயா.மோகன் கரண பயிற்சியை வழங்கினார். விழாவில் பேசிய இயக்குநர் வெ.சேகர், நான் திருக்குறளை படித்து முன்னேறினேன். பெற்றோரை பிள்ளைகள் மதிக்க திருக்குறளை கற்றுதர வேண்டும்.

குடும்ப விழாக்களில் தமிழ் முதலில் இருக்க வேண்டும். அதாவது திருக்குறள் வழியில் நடத்த வேண்டும். இதனால் குடும்ப நலம் மேம்படும். திருக்குறளும் தமிழும் வளரும் என்றார்.

திருக்குறளில் குடும்ப விழாக்களை நடத்தும் கரண பயிற்சி ஆசான்கள், சுமார் 20 மாவட்டங்களில் பயிற்சி அளித்து வருகின்றனர். குடும்ப நலத்தை திருவள்ளுவரை விட எவரும் சிறப்பாக சொன்னதில்லை. எனவே திறக்குறளின் வழியில் குடும்ப விழாக்களை நடத்த வேண்டும் என்றார்.

அடுத்த செய்தி