ஆப்நகரம்

ஜம்மு கல்வீச்சு சம்பவத்தில் உயிாிழந்த இளைஞரின் உடல் சென்னை வந்தது

ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் கிளச்சியாளா்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உயிாிழந்த திருமணியின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.

Samayam Tamil 8 May 2018, 9:00 pm
ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் கிளச்சியாளா்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உயிாிழந்த திருமணியின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.
Samayam Tamil THirumani 1.


ஜம்மு காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகா் பகுதியில் கிளா்ச்சியாளா்கள் சிலா் தொடா்ந்து கற்களை எரிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சென்னையில் இருந்து குடும்பத்தினரடன் சுற்றுலா சென்ற திருமணி சென்ற வாகனம் மீது கிளா்ச்சியாளா்கள் கற்களை எரிந்து தாக்குதல் நடத்தி உள்ளனா். இதில் எதிர்பாராத விதமாக திருமணியின் தலையில் கல் அடிபட்டத்தில் அவா் பலத்த காயம் அடைந்தாா்.

அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்ட திருமணி சிகிச்சை பலன் இன்றி உயிாிழந்தாா். இச்சம்வத்திற்கு அம்மாநில முதல்வா், பாதுகாப்புத்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்பட பலரும் கண்டனம் தொிவித்துள்ளனா். மேலும் அப்பகுதி பொதுமக்களும் கிளா்ச்சியாளா்களின் செயலுக்கு கண்டனம் தொிவித்துள்ளனா்.

இந்நிலையில் உயிாிழந்த திருமணியின் உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது. விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட திருமணியின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருமணியின் தந்தை கல்வீச்சு சம்பவம் தொடா்பாக கூறுகையில், நாங்கள் அனைவரும் தாழ்வாக இருந்ததால் எங்கள் மீது பெரிய அளவில் அடிபடவில்லை. திருமணி கீழே அமரும் தருணத்தில் அடிபட்டு விட்டது. உடலை கொண்டுவர ஜம்மு காஷ்மீா் அரசும், அம்மாநில காவல் துறையினரும் உதவி செய்ததாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி